SHORTCUT IDEA - GENERAL TAMIL
பொது தமிழ் பகுதியை பொறுத்த வரை அணைத்து தேர்வர்களுக்கும் கடினமாக உள்ள பகுதி "ஒரு பாடல் வரியினை" கொடுத்து யார் எழுதியது என்று கேட்கும் கேள்வியாகும்.
உதாரணமாக பாரதியார் எழுதிய முக்கிய பாடல்கள் மற்றும் அதனை எழுதில் நினைவில் வைத்து கொள்ள SHORTCUT ஐடியா.
பாரதியார் முக்கிய பாடல்கள்:
1) "மனதில் உறுதி வேண்டும் வாக்கினில் இனிமை வேண்டும்"
2) "உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாம்"
3) தனி ஒருவனுக்குனவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்"
4) "பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும்"
5) "ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே"
6) "ஏழை என்றும் அடிமை என்றும் எவனுமில்லை சாதியில்"
7) எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் இனம் எல்லோரும் இந்நாட்டு மக்கள்"
8) பள்ளித்தலம் அனைத்தும் கோயில் செய்குவோம்
9) புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
10) நமக்கு தொழில் கவிதை நாட்டுக்கு உழைத்தல்
11) காதல் போயின் காதல் போயின் சாதல் சாதல் சாதல்
12) பக்தி செய்வீர் செகத்தீரே பயனுண்டு பக்தியாலே"
13) செப்புமொழி பதினெட்டுடயால் எனில் சிந்தனை ஒன்றுடையாள்
14) செந்தமிழ் நாடெனும் போதினிலே
15) தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும்
16) தேமறுத தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்வோம்
மேற்கண்ட அணைத்து பாடல்களையும் எழுதில் நினைவில் வைக்க கீழ்க்கண்ட வரிகளில் உள்ள வார்த்தைகளை மட்டும் படித்தல் போதுமானது.
ஒவ்வொரு வார்த்தையும் மேற்கண்ட பாடல்களை வரிசையாக குறிக்கிறது.
SHORTCUT :
"மனதில் உறுதியுடனும் வாக்கில் ஒளியுடனும் தனி ஒருவனாக பிறநாடுக்கு சென்று, ஆண் பெண், ஏழை பணக்காரன் வேறுபாடில்லாமல், எல்லோரும் ஓர் குலமாக பள்ளிக்கூடம் அமைத்து ஏழைக்கு எழுத்தறிவித்து தொழில் செய்து காதல் பக்தி போன்ற சிந்தனைகளோடு செந்தமிழ் நாட்டின் தருமத்தினை உலகமெல்லாம் பரவும் வகை செய்வோம்"