பொருள் இலக்கணம் பற்றிய சில தகவல்கள்

GENERAL TAMIL GRAMMAR

 பொது தமிழ்பொருள் இலக்கணம் வகைகள் 

♣ அகப்பொருள்
♣ புறப்பொருள்
♦ அகப்பொருள்
ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் தம்முள் நுகரும் இன்பம் பற்றி கூறுவது - அகப்பொருள்
(குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை)
அகப்பொருள் உள்ள திணைகள் - 5
இதை 'அன்பின் ஐந்திணை" என்றும் கூறுவர்.
இதில் கைக்கிளை, பெருந்திணை சேர்த்து ஏழு எனவும் கூறுவர்
அகத்திணை கூறிய பொருட்கள் - 3
♣ முதற் பொருள்
♣ கருப்பொருள்
♣ உரிப்பொருள்
 முதற்பொருள்
தற்பொருளில் அடங்கி உள்ளவை - நிலமும், பொழுதும்
நிலம் வகைகள் - 5 (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை)
பொழுது வகைகள் - 2 (சிறுபொழுது, பெரும்பொழுது)
 கருப்பொருள்
ஐவகை நிலத்திற்கு கூறிய கருப்பொருள் - 13
(தெய்வம், மக்கள் (உயர்ந்தோர், தாழ்ந்தோர் ), உணவு, பறவை, விலங்கு, ஊர், நீர், பு , மரம், பண், யாழ், பறை, தொழில்)
 உரிப்பொருள்
✴ குறிஞ்சி - காண்டல் (அல்லது) புணர்தல் நிமித்தமும்
✴ முல்லை - இருத்தலும் இருத்தல் நிமத்தமும்
✴ முருதம் - ஊடலும் ஊடல் நிமுழித்தமும்
✴ நெய்தல் - இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
✴ பாலை - பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
♦ புறப்பொருள்:
புறப்பொருள் திணைகள் - 12
✴ வெட்சி - பசுக்கூட்டங்களை கவர்தல்.
✴ கரந்தை - கவர்ந்து சென்ற பசுக் கூட்டங்களை மீட்டல்
✴ வஞ்சி - நாட்டின் மீது படையெடுத்து செல்லல்.
✴ காஞ்சி - பகைவரை நாட்டில் புகாதவண்ணம் எதிர்சென்று தடுத்தல்.
✴ நொச்சி - கோட்டை மதிலை கைப்பற்றாவண்ணம் காத்தல்.
✴ உழிஞ்சை - கோட்டை மதிலை வளைத்துப் போர் செய்தல்
✴ தும்பை - இரு திறந்து வீரரும் போர்களத்தில் எதிரெதிரே நின்று போர் புரிதல்.
✴ வாகை - வென்றவரின் வெற்றியை கொண்டாடுவர;.
✴ பாடாண் - ஆண்மகனின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றை போற்றி பாடுவது.
✴ பொதுவியல் - வெட்சி முதல் பாடண்வரை உள்ள புறத்திணைகளின் பொதுவானவற்றையும் அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது.
✴ கைக்கிளை - ஒருதலை ஆண், பெண் ஆகிய இருவரில் எவரேனும் ஒருவரிடத்து மட்டும் தோன்றும் அன்பு. இது 2 வகை (ஆண்பால் கூற்று, பெண்பால் கூற்று)
✴ பெருந்திணை - பொருந்தாக் காமம். இது ஒத்த தலைவனும் தலைவியும் அல்லாதாரிட்த்து உண்டாகும் அன்பு