TNPSC தமிழ் வினாக்கள்

TNPSC TAMIL QUESTIONS
TNPSC GENERAL TAMIL QUESTION AND ANSWERS


*  ராமாமிர்தம் அம்மையார் முதல் போராட்டத்தை தொடங்கிய ஆண்டு - 1938

*  திருச்செந்திற் கலம்பகம் எத்தனை உறுப்புகளை கொண்டது - 18

*  அம்மானை என்பது - பெண்கள் விளையாடும் விளையாட்டு

*  திருச்செந்திற் கலம்பகத்தில் இடம் பெற்ற அம்மானையில் போற்றப்படும் தெய்வம் - முருகன்

*  முருகனால் சிறைப்பிடிக்கப்பட்டவன் - வேலன்

*  ஈசானதேசிகருக்கு கல்வி கற்றுக் கொடுத்தவர் - மயிலேறும் பெருமாள்

*  திருச்செந்திற் கலம்பகம் என்னும் நூலை இயற்றியவர் - சுவாமிநாததேசிகர்.

*  கதர் ஆடை என்பது - பருத்தி ஆடை

*  இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டவர் - காந்தியடிகள்

*  வானம் பார்த்த பூமி என்பது - புன்செய்

*  வேளாண் தொழிலில் உள்ள கூறுகள் - 6

*  வேளாண் பல்கலைக் கழகம் உள்ள இடம் - கோவை

*  சீவகசிந்தாமணி காப்பியத்தின் கதைத் தலைவன் - சீவகன்

*  நரிவிருத்தம் பாடியவர் - திருத்தக்க தேவர்

*  வீழ்ந்து வெண்மழை தவழும் - என்ற சீவக சிந்தாமணி பாடலில் கூறப்படும் காட்சி -  ஒரு நாட்டியம் நடப்பது போல

*  காராளர் என்பவர் - உழவர்

*  ஆழி என்பதன் பொருள் -  மோதிரம்

*  வேந்தர் என்பதன் பொருள் - மன்னர்

*  கம்பர் பிறந்த ஊர் - தேரழுந்தூர்

*  தமிழரின் தற்காப்பு விளையாட்டுகளில் ஒன்று - சிலம்பாட்டம்

*  யானைப் போர் காண்பதற்காக மதுரையில் கட்டப்பட்டது - தமுக்கம் மண்டபம்

*  விளையாட்டின் விழியாக கிடைப்பது - பட்டறிவு

*  விளையாட்டின் அடிப்படை நோக்கம் - போட்டியிடுவது

*  பாரதிக்கு பிறகு கவிதை மரபில் திருப்பம் விளைவித்தது யாருடைய படைப்பு - ந.பிச்சைமூர்த்தி

*  மருதகாசி பிறந்த ஊர் - மேலக்குடிக்காடு

*   தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு.வரதராசனார்

*   தமிழ் வரலாற்று நாவலின் தந்தை -  ககல்கி

*   தமிழ் நாடகத் தந்தை -  பம்மல் சம்பந்த முதலியார்

*   தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் - சங்கரதாஸ் சுவாமிகள்

*   தனித்தமிழ் இசைக்காவலர் - இராசா.அண்ணாமலைச் செட்டியார்.

* சீட்டுக்கவி பாடுவதில் வல்லவர் - அந்தகக் கவிவீரராகவர்

*  அந்தகக் கவி வீரராகவர் பிறந்த ஊர் - பூதூர்

*  சந்திரவாணன் கோவை என்ற நூலை எழுதியவர் - அந்தகக் கவி வீரராகவர்

*  கூன்பாண்டியன் காலத்தில் மதுரையில் சைவத்தை காத்தவர் - திருஞானசம்பந்தர்

*  மதுரையில் ஆடைகள் விற்கும் கடைப்பகுதி இருந்த வீதியின் பெயர் - அறுவை வீதி

*  மதுரை நகரின் பெயர் கல்வெட்டில் எப்படி எழுதப்பட்டுள்ளது -மதிரை

*  மதுரையில் தாஜ்மகால் போல கட்டப்பட்ட கட்டிடம் - திருமலை நாயக்கர் மகால்

*  கடைச் சங்கம் எங்கு நிறுவப்பட்டது - மதுரை

*  மதுரை என்ற சொல்லுக்கு இனிமை என்று பெயர்

*  திருவிழா நகர், கோயில் நகர் என்று சிறப்பிக்கப்படும் நகர் - மதுரை

*  தென்னிந்தியாவில் ஏதென்ஸ் என்று புகழப்படும் நகரம் - மதுரை

*  தங்கப் பதுமையாம் தோழர்களோடு இவ்வடிவில் பதுமை என்னும் சொல் உணர்த்தும் பொருள் - உருவம்

*  திருவாரூர் நான்மணி மாலையை எழுதியவர் - குமரகுருபரர்

*  குமரகுருபரர் பிறந்த ஊர் - திருவைகுண்டம்

*  குமரகுருபரர் வாழ்ந்த  காலம் - கி.பி.16

*  நான்மணி மாலை என்பது - சிற்றிலக்கியம்

*  மண் சுமந்தார் என குறிப்பிடப்படுபவர் - சிவபெருமான்

*  வாணிதாசன் சொந்த ஊர் - வில்லியனூர்

*  வாணிதாசன் இயற்பெயர் - அரங்கசாமி

*  தமிழகத்தின் அன்னிபெசன்ட் என்று புகழப்பட்டவர் - ராமாமிர்தம் அம்மையார்