இந்திய அரசியல் மனித உரிமை சாசன வினா விடைகள்

1. சமுதாயத்தில் மனிதன் சுமூகமாக வாழத் தேவையான நிலையை ------------- என அழைக்கிறோம். - உரிமை
2. ஒவ்வொரு ஆண்டும், -------------------- ஆம் நாள் ஐ.நா. தினமாகக் கொண்டாடப்படுகிறது. - அக்டோபர் 24
3. --------------- ஆம் நாள் ஐக்கிய நாடுகளின் சபை தோற்றுவிக்கப்பட்டது. - 1945ம் ஆண்டு அக்டோபர் 24
4. ஐ.நா சபையின் முக்கியமான கோட்பாடுகளில் ஒன்று ---------------- ஆகும். - மனித உரிமைகளை பாதுகாப்பதும், அதனை மதிப்புறச்செய்வதும்
5. ஐ.நா. சபையின் மனித உரிமைகள் குழு மனித உரிமைகள் மசோதாவைத் தயாரித்து வழங்கியது. இம்மசோதா ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ----------------- ஆம் நாள் நிறைவேற்றப்பட்டது. - 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10
6. மனித உரிமைகள் மசோதாவே ------------------ என்று அழைக்கப்படுகிறது. - அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம்
7. ஒவ்வொரு ஆண்டும் ------------------- ஆம் நாள் மனித உரிமைகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. - டிசம்பர் 10
8. அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம், மக்களிடையே ------------- உறுதி செய்கிறது. - சமத்துவத்தை
9. அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் ------------- சரத்துகளைக் கொண்டது. - 30
10. அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் ------------------ பகுதிகளாகப் பாகுபாடு செய்யப்பட்டுள்ளது. - இரண்டு
11. அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தின் இரண்டு பகுதிகள் - 1. வாழ்வியல் மற்றும் அரசியல் உரிமைகள், 2. பொருளாதாரம், சமூக மற்றும் பண்பாட்டு உரிமைகள்
12. அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம், -------------- நாடுகளுக்கும் ஏற்புடையதாகும். - அனைத்து
13. 1966ம் ஆண்டு ஐ.நா.சபை மனித உரிமைகளைப் பாதுகாக்க ------- ஒப்பந்தங்களை உருவாக்கியது. - இரண்டு
14. 1966ம் ஆண்டு ஐ.நா.சபை மனித உரிமைகளைப் பாதுகாக்க உருவாக்கிய இரு ஒப்பந்தங்கள் - 1. அனைத்துலகப் பொருளாதார, சமூக மற்றும் பண்பாட்டு உரிமைகள் ஒப்பந்தம், 2. அனைத்துலக வாழ்வியல் மற்றும் அரசியல் உரிமைகள் ஒப்பந்தம்
15. -------------------------- உலக அளவில் மனித உரிமைப் பாதுகாப்பில் முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது. - ஐ.நா.சபை